நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கும் அறிக்கை

251 0

சர்ச்சைக்குரிய மாலபே நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை அரசுடமையாக்கும் அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த எழுத்து மூல ஆவணத்தில் தானும், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்தவொரு நஸ்டஈடுகளும் இன்றி, குறித்த வைத்தியசாலையை அரசுக்கு வழங்க வைத்தியசாலை அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாவும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.