வித்தியா வழக்கை கொழும்புக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

302 0

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி பலியான புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் நீதி விசாரணையை கொழும்பிற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வித்தியாவிற்கான நீதி விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் வேண்டும், ஏமாற்றாதே மாணவியின் நீதியை கொழும்புக்கு மாற்றி எனும் வாசகங்களை தாங்கி புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்னால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம், மாலை 05.00 மணி வரை இடம்பெறவுள்ளது.