மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகம் 83ஆவது நாளாக இன்றும்…(காணொளி)

548 0

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கான தொழில் உரிமையினை இதுவரையில் யாரும் உறுதிப்படுத்தாத நிலையில்,தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக பட்டதாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அரசியல்வாதிகள் தமக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரையில், அரசிற்கு அழுத்தங்களை வழங்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.