அதிவேக வீதியில் விபத்து – பெண் பலி, இருவர் படுகாயம்

285 0

தெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கொட்டாவவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வேன் ஒன்று முன்னால் பயணித்த கண்டைனருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த வேன் சாரதி மற்றும் இரு பெண்கள் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண் எனத் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே என, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.