இவர்கள் பற்றி தெரிந்தால் உடன் அறிவியுங்கள்!

305 0

பிலியந்தலை நகரில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை அடையாளம் காண பொது மக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இருவரின் புகைப்படங்களை ஊடகங்களில் வௌியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் குறித்த நபர்கள் பற்றிய தகவல்களை விரைவாக தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 9ம் திகதி பிலியந்தலை நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் மேலும் இரு அதிகாரிகள் உட்பட அறுவர் படுகாயமடைந்தனர்.

இதேவேளை, குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், அன்றைய தினமே தெல்கொட பகுதியில் வைத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த வாகனத்தை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இருவரின் புகைப்படங்களை, வரைந்து பொலிஸார் அதனை வௌியிட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் 30 – 32 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 3 அங்குலம் உயரமுடையவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றையவர் 38 – 42 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபர்கள் குறித்த தகவல் அறிந்தவர்கள் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு தெரியப்படுத்தலாம்.

0718 591 641
0112 852 555
0718 591 727
0112 662 323

மேலும், சாதகமான தகவல்களை வழங்கும் நபருக்கு பொலிஸ்மா அதிபரால் விஷேட அன்பளிப்பு ஒன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.