வெலிகந்த – அசேலபுர வன பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவற்துறை தெரிவித்துள்ளது.
வெலிகந்த பிரதேசத்தினை சேர்ந்த 70 வயதுடைய நபரின் சடலம் என காவற்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.