நாடு பூராகவும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

245 0

எதிர்வரும் வாரத்தில் நாடு பூராகவும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

டெங்கு தொற்று பரவி வருகின்றமையினாலே இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய கொழும்பு, கம்பஹா உட்பட 12 மாவட்டங்களை மையமாக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரவித்துள்ளது.

இந்த வருடத்தில் இது வரையிலான காலப்பகுதியில் 43 ஆயிரம் பேர் டெங்கு தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளனர்.