யாழில் பாரிய மோசடியில் ஈடுபட்ட வவுனியா நபர் பொலீசாரால் கைது

291 0
யாழ் மாவட்ட அரச அதிபரின் கையெழுத்தை பயன்படுத்தி  பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண பெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்
வவுனியாவை சேர்ந்த குறித்த நபர்  பாசையூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில் காணமல் போனவர் தொடர்பான விபரங்களை கூறி கண்டுபிடித்து தருவதாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளார்.
அத்துடன் அரச அலுவலருக்கு அரச அதிபரின் கையெழுத்துடனான கடிதம் ஒன்றையும் வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மேல் சந்தேகம் கொண்ட அலுவலர் யாழ் அரச அதிபருக்கு விபரத்தை தெரியப்படுத்தி அரச அதிபர் ஊடாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.  பொலிஸாரின் திடீர் தேடுதலில் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்கு பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.