மோடிக்காக வந்த இந்திய ஹெலிகொப்டர் கண்டியில்

256 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக இலங்கைக்கு வந்த இந்திய இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் இன்னும் இந்தியா நோக்கி செல்லாமல் கண்டியில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹெலிகொப்டரின் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இது தற்சமயம் அஸ்கிரிய விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.ஐ.17 வர்க்கத்திலான குறித்த ஹெலிகொப்டர் இலங்கை விமானப்படையினர் பரிசோதித்து வருவதாகவும் இதற்கு தேவையான விமானப் பாகங்கள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.