அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் சார்பில் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது – ரஞ்சித் சொய்சா

287 0

அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் சார்பில் புதிய அமைப்பொன்றை நிறுவ உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த 26 மாதங்களில் பல்வேறு தரப்பினர் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதி;காலத்தில் அமையவுள்ள அரசாங்கத்தின் ஊடாக, நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.