ஆவணப்பதிவுகள் உரியமுறையில் செய்யப்பட்டிருக்குமானால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் எவ்வித தடைகளும் இல்லை

339 0

ஆவணப்பதிவுகள் உரியமுறையில் செய்யப்பட்டிருக்குமானால், இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் எவ்வித தடைகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளையதினம் இந்த சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் இறுதித்தினமாக உள்ளது.

ஏற்கனவே இந்த சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதியை வழங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு ஜிஎஸ்பி பிளஸ் வரி சலுகை மீளப்பெறப்பட்ட பின்னர் இலங்கையில் 25 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

சுமார் 10ஆயிரம் பேர் தமது தொழில்களை இழந்தனர்.

இந்தநிலையில் குறித்த சலுகை கிடைத்த பின்னர் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 20ஆயிரம் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கமுடியும் என்று ஆடைத்தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.