கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருப்பதி தரிசன டிக்கெட்

382 0

201608011031009544_Tirupati-temple-darshan-ticket-sale-in-koyambedu-bus-stand_SECVPFதிருப்பதி திருமலை தரிசன டிக்கெட் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
பஸ் பயணிகள் வசதிக்காக ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தின் அலுவலகம் உள்ளது. அங்கு இன்று முதல் திருமலை தரிசன டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர அரசு போக்குவரத்து கழக கோயம்பேடு பிரிவு மேலாளர் நவீன்குமார் கூறியதாவது:-

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. வசதி உடைய பஸ் டிக்கெட்டுடன் சேர்த்து திருமலை தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

பஸ் பயண கட்டணம் ரூ.300-ன் தரிசன கட்டணம் ரூ.300 சேர்த்து ரூ. 600 செலுத்த வேண்டும். தினமும் 5 ஆயிரம் தரிசன டிக்கெட் வினியோகிக்கப்படும்.

பஸ் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை டிக்கெட் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 90007 68373, 73828 81885 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.apsrtconline.in  என்ற இணைய தளத்திலும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.