பாசாலை மாணவர்களுக்கு இடையில் புரிந்துணர்வே இனப்பிரசினைக்கு தீர்வு

640 0

Irathakrishnan-720x480பாடசாலை மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தினால் மாத்திரமே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டில் எதிர்கால சிறந்த தலைவர்களையும் உருவாக்கலாம்.
இதற்கான ஒரு விசேட வேலைத் திட்டம் தற்பொழுது கல்வி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நகர நண்பர்கள் எனும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டம் கண்டியில் 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில், எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.