24 மணி நேரத்தில் 8 பேர் பலி

290 0

கடந்த 24 மணி நேரத்துக்குள் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – ஹபரனை வீதியில் பெந்திவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.

மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் நான்கு பேருடன் பயணித்த உந்துருளி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

அதேநேரம் அனுராதபுரம் – கல்நேவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 63 வயதான பெண் ஒருவர் பலியானார்.

அதேநேரம் சூரியவௌ, மீகம்ஜந்துர வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 21 வயதான இளைஞர் ஒருவுர் உயிரிழந்தார்.

அத்துடன் ஹபரன – திருகோணமலை வீதியில் கலபத்கந்த பகுதியிலும், புலத்சிங்க – போல்காவ பகுதியிலும் இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.