இலங்கையின் உள்நாட்டு வருவாய் சட்ட மூலம் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வு – சர்வதேச நாணய நிதியம்

237 0

இலங்கையின் உள்நாட்டு வருவாய் சட்ட மூலத்தை தமது சட்டவல்லுனர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் தொடர்பாடல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் வில்லியம் மரே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மூன்றாம் தவணைக் கடனை வழங்குவது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டுள்ளது.

அண்மையில் உள்நாட்டு வருவாய் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.