மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக நாளை சீனா செல்கிறார் ரணில்

228 0

சீனாவில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பேராசிரியர் மைத்திரி விக்ரமிசிங்கவுடன் நாளை சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ள இந்த வட்ட மேசை கலந்துரையாடல் சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெற உள்ளது.

சீன ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான “ஒரே பிராந்தியம் ஒரே பாதை” என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு இடம்பெற உள்ளது.

சிறப்பு பொறுப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பிரதமரின் இந்த விஜயத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.