களுத்துறை – எதனமடல பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள், 27 வயதான கடுவலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், அதுருகிரிய பிரதேசத்தை ஒருவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள குழு தலைவர் சமயங் உள்ளிட்ட 5 கைதிகளும், சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் 20 பேர் தொடர்புபட்டுள்ளதாக இதற்கு முன்னர் காவற்துறை அறிவித்திருந்தது.
இதில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.