கொரியாவில் தொழில்வாய்ப்பிற்காக செல்பவர்களிடம் 5 லட்சம் ரூபாய் அறவீடு இரத்து

251 0

கொரியாவில் தொழில்வாய்ப்பிற்காக செல்பவர்களிடம் பெறப்படும் 5 லட்சம் ரூபாய் அறவீடு இரத்து செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் ஆலோசனைக்கு அமைய இந்த அறவீடு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் சுமார் 26 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்ற நிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 629 பேர் தென்கொரியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.