சைட்டம் மூடப்பட வேண்டும் – தயாசிறி

238 0

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் அமைக்கப்பட்ட  சைட்டம் தனியார் மருத்துவக் கல்லுாரியை மூடிவிட வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இக்கல்லூரிக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். உள்ள மாணவர்களுக்கு மாற்று நடவடிக்கை தொடர்பில் வழிகாட்ட வேண்டும். இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாயின் எதிர்காலத்தில் நாம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டி வரும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

சைட்டம் அது மூடப்பட மாட்டாது எனவும், அதனை நடாத்திச் செல்வதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானம் எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சர் ஒருவர் சைட்டம் மூடப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.