துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம் – இருவர் காயம்

253 0

களுத்துறை – வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் மரணமானார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியகொரடுவ பகுதியில் குறித்த துப்பாக்கி;ச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் அவசர சேவை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமானவர் கொஸ்கொட 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சாமர அபேசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது நாகொட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரண விசாரணைகள் இன்று நடைபெறும்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர்.