முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் – 18ஆம் திகதி, 12ஆம் திகதி வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்

339 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தால், இந்த மாதம் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், 12ஆம் திகதி முதல்வட கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 12ம் திகதி 600 செம்மணியில் ஆரம்பிக்கப்படும் நிகழ்வு, பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18ஆம் திகதி முள்ளிவாய்கால் மண்ணில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.