பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் கைது

312 0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக் கடற்பரப்பில் உள்ளுர் மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சட்ட விரோதமாக கடலட்டை வேட்டையில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களிடம் இருந்து 280 கடல் அட்டைகளும், ஆறு சுழியோடி உடைகளும், பிராணவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடலட்டை வேட்டை இலங்கையில் தடை செய்யப்படாத போதும், அதற்கு விசேட அனுமதிப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.