பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் பதவி வழங்கப்படமாட்டாது

246 0
இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது எந்த ஒரு பதவி மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று மாலை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு கட்சியின் உபத்தலைவர் பதவி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அவ்வாறான எந்த பதவி நியமனங்களும் வழங்கப்படதாது என நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது