புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் கொள்ளை

262 0

புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து அங்கிருந்த கஞ்சா உள்ளிட்ட மேலும் சில உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்தின் கூரையின் ஓடுகளை அகற்றி வழக்கு உபகரண அறையினுள் நேற்று இரவு கொள்ளையர்கள் சிலர் நுழைந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

புத்தளம் மாவட்ட நீதிமன்றின் மற்றும் நீதவான் நீதிமன்றின் ஆவணங்கள் இந்த அறையிலேயே வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.