புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இருவர் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

247 0

புதிய தூதுவர்கள் இருவர் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக்கடிதங்களை கையளித்தனர்.

நேபாளம் , இந்தோனேஷியா நாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் இருவரும் மற்றும் மோல்டா இராச்சியம் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உயர் ஸ்தானிகர்கள் இருவருமே இவ்வாறு நியமனக்கடிதங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மற்றும் குறித்த நாடுகளுக்கிடையில் நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த இராஜதந்திரிகள் செயற்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.