ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் மைத்திரியுடன்

281 0

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், கூட்டு எதிர்க்கட்சி அதில் தோல்வியடையும். மகிந்த ராஜபக்சவுக்கு இது நன்றாக தெரியும்.

இதனால், கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடுவார்கள்.

அதற்கு தேவையான அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பிரபலமான இரண்டு, மூன்று பேர் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.