மீனவர்கள் வௌிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும்

265 0

இலங்கை மீனவர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இல்லாமல் வௌிநாடுகளுக்கு செல்லும் மீனவர்களுக்கு மரணம் கூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.