உதயங்சவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

252 0

மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்ச வீரதுங்கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த வங்கிக் கணக்கு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து, நீதிமன்றத்தில் தகவலளிக்கும் வரை கால அவகாசம் வழங்குமாறும், அவர் இதன்போது கோரியிருந்தார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 21ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், அன்றையதினம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான நிலவரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.