கம்பளை சிறுவனைக் கடத்திய மேலும் மூவர் காத்தான்குடியில் கைது

274 0

கம்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் வைத்தே கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இவர்களை கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில், கப்பம் பெறும் நோக்குடன் கம்பளை பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதான சிறுவன் கடத்தப்பட்டார்.

பின்னர் அவரை மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் வைத்து பொலிஸார் மீட்டனர். இதனையடுத்து, சிறுவனின் மாமாவான 26 வயதான இளைஞரே இந்த கடத்தலை திட்டமிட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

முன்னதாக இந்த கடத்தலுடன் தொடர்புடைய இரு பெண்கள் (தாய், மகள்) உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.