நம்பி ஏமாறுகிறோம் விழிப்படைய வேண்டும்- சிறிகாந்தா

357 0

புதிய அரசியலமைப்பு விவகாரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற சிந்தனையில்தான் சிங்கள பெரும்பான்மையினரின் சிந்தனைகள் அமைந்திருக்கின்றன.

இதற்கு நாங்கள் நம்பி ஏமாந்த பல வரலாறுகளை குறிப்பிட முடியும் என தெரிவித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா, தமிழர்கள் அரசியலில் தாம் தீர்மானித்த இலக்கை நோக்கி உறுதியாக நகர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.