சென்னை வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி

273 0

சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

சென்னை வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5 பேர் தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என்று கூறப்படுகிறது. கடுமையாக புகைமூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இரு சக்கர வாகன நிறுத்தத்தில்தான் முதலில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகிவிட்டன. தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.