இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், மோடியின் விஜயத்தை எதிர்த்து, கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.
எனவே, கொழும்பு மற்றும் கண்டி முதலான நகரங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சாதாரண பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விசேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு சிறப்பதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.