இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும்

541 0

201607300615389712_Pakistan-must-end-ties-with-India-Salahuddin_SECVPFஇந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்துபவர்கள் பாகிஸ்தானில் இருந்து பயிற்சி பெற்றவர்கள் என்று இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியா உடனான அரசியல் ராஜதந்திரங்கள் மற்றும் பொருளாதார உறவுகளை கைவிட வேண்டும். ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தானுக்கு வரவேற்பது காஷ்மீர் மக்களுக்கு மிகவும் வலி தரக் கூடிய ஒன்றாக தான் இருக்கும். ராஜ்நாத் சிங்கை ஆகஸ்ட் 13-ம் தேதி வரவேற்பதற்கு பதிலாக பாகிஸ்தான் இந்தியா உடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கியமான பிரமுகர்களில் சையத் சலாஹுதீனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.