பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

13 0

கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவில் இருந்து தம்பதி நாடு திரும்பியுள்ளது.

இந்நிலையில் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி செல்லும் ரயிலில் ஏறும் போது, ​​அவர்களின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

திருடிய நபரை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் துரத்திச் சென்றதை அடுத்து, பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன், உடனடியாக பிரித்தானியரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர்.

பேலியகொடயில் உள்ள வீடு ஒன்றிற்குள் பையுடன் குறித்த நபர் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.