சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை

11 0

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக பதில் பொதுச்செயலாளராக இருந்த பத்மநாதன் சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவி விலகியதை அடுத்து, எம்.ஏ.சுமந்திரன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சுமந்திரன் கட்சி ரீதியில் வெளியிடும் கடிதங்கள் மற்றும் அறிவிப்புக்கள் அனைத்திலும், தனது பதவியை குறிப்பிடும் போது பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு வருகின்றார்.

இது, தமிழ் அரசியல் தரப்புகளில், பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளதுடன் கட்சியின் யாப்பு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அதற்கிடையில், சுமந்திரன் பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் இருப்பது கட்சியில் தான் முதல் என்பதை காட்டிக் கொள்ள தான் எனவும், இதன் பின்னணியில் தமிழரசு கட்சி அழிவை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது எனவும் பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.