குஹாகொட குப்பை மேட்டில் அச்சுறுத்தல் இல்லை

251 0

கண்டி, குஹாகொட பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பிரதேசத்தில் அச்சுறுத்தலான நிலை இல்லை என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

குஹாகொட பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் ஊடாக எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு முகாமை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குப்பை பிரச்சினைக்கு முழுமையான தீர்வு வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் கூறினார்.