உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கூட்டு எதிர்க்கட்சி ஹர்த்தால்!

232 0

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தாலை நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள் இந்த ஹர்த்தால் நடத்தப்பட உள்ளது எனவும் கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு முரணானது என்பதால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.