வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் கடந்த மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும்.
இதேவேளை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.