தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு முன்னிட்டு கிளிநொச்சி பகுதியில் வியாபாரம் களை கட்டியுள்ளது.
கிளிநொச்சி நகரின் கனகபுரம் பகுதியில் உள்ள புடவை வியாபார நிலையங்களில் அதிக சனநெரிசல் காணப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டானது நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில் கிளிநொச்சி நகருக்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்துள்ளது.