இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிந்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் தொழில்முனைவோருமான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாங்கம், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாராளுமன்றில் தாக்கல் செய்யாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர இவ்வாறு தெரிவித்தார்.