மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்ட தமிழ் தின போட்டிகள் (காணொளி)

287 0

 

பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் தின போட்டிகள் நடைபெற்றன.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தலைமையில் இன்று ஆரம்பமான தமிழ் தின போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த தமிழ் மொழிதின போட்டியில் 39 பாடசாலைகளில் இருந்து சுமார் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகளில் பேச்சு, நாடகம், நாட்டியம், இசை, பாடல், கட்டுரை என 25 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் இடத்தினைப்பெறும் போட்டியாளர்கள் வலய மட்ட போட்டிகளில் பங்குபெற்றும் தகுதியை பெறுவார்கள் என மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தெரிவித்துள்ளார்.