தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மன்னாரை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இதில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.