சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம், கிளிநொச்சியில்……(காணொளி)

279 0

உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பநல மாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில், 1992ம் ஆண்டிலிருந்து வருடா வருடம் வைகாசி மாதம் 5ம்திகதி அன்று சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கமைய நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒழுங்கமைப்பில், கரைச்சி பொதுச்சுகாதார தாதிய உத்தியோகத்தரது நெறிப்படுத்தலில் சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.பாபு பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலனும் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சேவையாற்றும் குடும்ப நலமாதுக்கள், மாவட்டத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் மாவட்டத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற குடும்பநல மாதுக்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்ப நலமாதுக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 2016ம் ஆண்டு தமது சேவைகளைத் திறம்பட வழங்கிய குடும்பநல மருத்துவ மாதுக்களுக்கு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.