அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 44% வரி விதிக்கப்பட்டு, தற்போது இடை நிறுத்தப்பட்ட இந்த 90 நாள் இடைக்கால அவகாசத்தில், நிலைமையைக் கண்காணித்து உரிய ஆலோசனைகளை முன்வைக்க, ஆளும் கட்சி, எதிர் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு அமைக்கப்படும்.
இந்த முடிவை இன்றைய சர்வகட்சி மாநாட்டின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்தார் என மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.