மஹிந்தவை கொலை செய்ய திட்டம்? – பாடகியிடம் விசாரணை

395 0

A-budget-pack-from-CWEமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றவருக்கு உதவியதாக பிரபல பாடகி சமிதா எரந்ததி முதுன் கொட்டுவவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வு பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு கொழும்பிற்கு வந்த விடுதலை புலி உறுப்பினர் தங்குவதற்கு இடம் வழங்கியதாக பாடகி சமிதா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்தவே குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

விடுதலைப்புலி சந்தேகநபர்கள் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஊடாக, சமிதாவை அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பான உண்மை முழுமையான தகவல்கள் விரைவில் வெளிவரலாம் என நம்பப்படுகின்றது!