அரச மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

247 0
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8.00 மணிக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரப்பு தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளையும் முன்வைத்து, இந்தப் போராட்டம் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆசிரியர், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் மேற்கொண்ட இந்தப் பணிப் புறக்கணிப்பால், பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இதேவேளை, இந்த பணிப்புறக்கணிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பாரிய பரிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தொடரூந்து சாரதிகள் மற்றும் காவலர்கள் நேற்று முன்னெடுத்த போராட்டம் காலை 8.00 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.