கடந்த அரசாங்கத்தினது கடனையும் செலுத்துவோம் – ரணில்

260 0

விரைவான அபிவிருத்தியின் மூலம் தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த அரசாங்கத்தினதும் கடனை செலுத்த கூடிய வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளை – ஊவா பரணகம – யாலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் ஏற்றுமதி விவசாய இளைஞர் கிராமத்தின் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.