மோடி தமது இலங்கை விஜயத்தின் போது தமிழக மீனவர்கள் கவனம் செலுத்த வேண்டும் – ஸ்டாலின்

363 0

பிரதமர் நரேந்திர மோடி தமது இலங்கை விஜயத்தின் போது, தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாட்டுத் தலைவர் மு.க ஸ்டாலின் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தற்போது 5 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்னர்.

அத்துடன், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 134 படகுகளும் இலங்கையின் தடுப்பில் உள்ளன.

எனவே, மீனவர்களையும், படகுகளையும் மீட்பது குறித்து மோடி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன், மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவும் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.