சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கலந்துரையாடல்

235 0

சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து, இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தொடர்பாடலுக்கான செய்மதி நேற்று விண்ணில் ஏவப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான இந்திய பிரதமரின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.