அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த பேருந்து சிக்கியது

285 0
அனுமதி பத்திரம் இல்லாமல் களவாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகீஸ்வரனின்    ஈஸ்வரன் ரவல்ஸ் பேருந்தை     நேற்று இரவு  யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றினர்.
 யாழ்ப்பாணம் பண்ணை  பஸ் தரிப்பு நிலையத்தில் சுமார் 51  பயணிகளை களவாக ஏற்றிச் சென்ற வேளையில் நாவற்குழி பகுதியில் யாழ்ப்பாணப்  பொலிசார் பேருந்தை மடக்கி பிடித்தனர்.  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   வஜிர தலைமையில் நடந்த  சோதனையின் போது கைப்பற்றப்பட்டது .சாரதி மற்றும் நடத்துனர்  சிறையில் அடைக்கப்பட்டார்.